என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கணவரால் கைவிடப்பட்ட பெண்
நீங்கள் தேடியது "கணவரால் கைவிடப்பட்ட பெண்"
வங்காளதேசத்தில் கணவரால் கைவிடப்பட்ட இந்திய பெண், முறையான ஆவணங்களின்றி பயணம் செய்ததால் பிடிபட்டு காவல் நிலையத்தில் இருந்த நிலையில் அங்குள்ள கழிவறையில் குழந்தை பெற்றுள்ளார்.
டாக்கா:
இந்தியாவில் மரச்சாமான்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த் அப்துல் என்பவர் ரோக்ஷனா அக்தர் அனும் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கர்பமாக இருந்த ரோக்ஷனாவை வங்காளதேசத்தின் நாராயணகஞ்ஜ் பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு கடந்த மாதம் அப்துல் அழைத்து சென்றார்.
அங்கு, ரோக்ஷனாவை கைவிட்டுவிட்டு அவரது பாஸ்போர்ட்டையும் எடுத்துக்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் அப்துல் மாயமானார். வங்காளதேசத்தில் ஆதரவு ஏதும் இன்றி நிர்கதியாக இருந்த ரோக்ஷனா, நாராயணகஞ்ஜ் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறியுள்ளார். முறையான ஆவணங்களின்றி பயணம் செய்த அவரை டிக்கெட் பரிசோதகர் கமால்பூர் ரெயில்வே காவல் நிலைய போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
ரெயில்வே காவல் நிலையத்தில் இருந்த ரோக்ஷனா, அங்கிருந்த கழிப்பறையில் ஆண் குழந்தையை பிரசவித்த கொடூரம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தாயையும் குழந்தையையும் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்தியாவில் உள்ள ரோக்ஷனாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களையும் போலீசார் தெரிவித்தனர்.
இந்தியாவில் மரச்சாமான்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த் அப்துல் என்பவர் ரோக்ஷனா அக்தர் அனும் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கர்பமாக இருந்த ரோக்ஷனாவை வங்காளதேசத்தின் நாராயணகஞ்ஜ் பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு கடந்த மாதம் அப்துல் அழைத்து சென்றார்.
அங்கு, ரோக்ஷனாவை கைவிட்டுவிட்டு அவரது பாஸ்போர்ட்டையும் எடுத்துக்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் அப்துல் மாயமானார். வங்காளதேசத்தில் ஆதரவு ஏதும் இன்றி நிர்கதியாக இருந்த ரோக்ஷனா, நாராயணகஞ்ஜ் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறியுள்ளார். முறையான ஆவணங்களின்றி பயணம் செய்த அவரை டிக்கெட் பரிசோதகர் கமால்பூர் ரெயில்வே காவல் நிலைய போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
ரெயில்வே காவல் நிலையத்தில் இருந்த ரோக்ஷனா, அங்கிருந்த கழிப்பறையில் ஆண் குழந்தையை பிரசவித்த கொடூரம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தாயையும் குழந்தையையும் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்தியாவில் உள்ள ரோக்ஷனாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களையும் போலீசார் தெரிவித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X